Monday 6th of May 2024 12:45:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
கூராய் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மண் அகழ்வு;  ஐவர் கைது!

கூராய் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மண் அகழ்வு; ஐவர் கைது!


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூராய் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றி விற்பனை நோக்காக கொண்டு செல்ல தயாராக இருந்த நிலையில் நேற்று புதன் கிழமை (21) மாலை மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ ராஜபக்ச தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயல் பட்டனர்.

இதன் போது 5 உழவு இயந்திரங்களையும், ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைக்காக இலுப்பக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE